பண்டிகை காலத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படலாம்!

உணவுப் பொருட்களின் விலை பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கிகள் டொலர்களை விடுவிக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, உலர் பழங்கள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, அவற்றை இறக்குமதி செய்யும் நாடுகளின் விற்பனை விலையைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது. அவற்றில் சிலவற்றின் உற்பத்தி குறைந்ததால், அந்நாடுகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. … Continue reading பண்டிகை காலத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படலாம்!